×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை நிற்கிறோம்!: மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.. ஆம் ஆத்மி கடும் தாக்கு..!!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு ஆம்ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் மீதான நடவடிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு ஆம் ஆத்மி கட்சி வழக்கறிஞர் அணி தலைவர் எம்.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி கைது என்பது இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மீதான தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

இது நமது ஜனநாயகத்தின் அடித்தளத்திலேயே ஓட்டை விழ செய்கிறது. பாஜகவின் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நள்ளிரவில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். உடல்நிலை சரியில்லாமல் அவர் கைது செய்யப்பட்ட விதம் மனிதாபிமானமற்றது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை என்பது கவலையளிப்பதாக உள்ளது.

மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் மீதான இத்தகைய தொடர் நடவடிக்கைகள், ஜனநாயகம் மீதான தாக்குதல் என ஆம்ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை நிற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை நிற்கிறோம்!: மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.. ஆம் ஆத்மி கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Delhi ,Amadmy ,Chennai Omanthurar Multipurpose Hospital ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...